LSGvsMI: மும்பை அணி மரண அடி..! லக்னோ அணிக்கு இமாலய இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 182/8 ரன்கள் குவித்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டியில் இன்றைய வெளியேற்று சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி, மும்பை அணியில் முதலில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

கேமரூன் கிரீன் அரைசதம் எட்டுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து, சூர்யகுமாரும் நவீன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன் ஜோடி விளையாட நேஹால் வதேரா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், நேஹால் வதேரா 23 ரன்களும் குவித்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

26 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago