Lucknow Innings [Image Source : IPLT20]
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 177/3 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதில் குயின்டன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால், அரைசதம் எட்டவிருந்த பாண்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இறுதிவரை நிற்க இன்னிங்ஸ் முடிந்தது.
முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 89* ரன்களும், க்ருனால் பாண்டியா 49 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…