கொல்கத்தாவில் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..காரணம் கங்குலி-மம்தா மோதலா??

Published by
kavitha

இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிகிறது.

Image result for mamtha benarji southafrica playerஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது போட்டிக்குப் பின்னரே அதாவது மார்ச் 18 தங்களது நாட்டிற்கு திரும்ப இருந்தனர். இதனிடையே கோல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியை   பிசிசிஐ ரத்து செய்தது குறித்து, கொல்கத்தா போலீசாருக்கு முறைப்படி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து கூறுகையில்,கோல்கத்தாவில் போட்டி நடத்த வேண்டாம் என்று நாங்கள் உத்தர எதுவும் போட வில்லை. நீங்களாக  ஒரு முடிவு எடுத்துக் கொண்டால் எப்படி நன்றாக இருக்கும்.

மேலும் பேசிய அவர் நண்பர் கங்குலியுடனான நட்பு எல்லாம் சரி தான்.ஆனால் எங்களிடம் இது குறித்து ஒருவார்த்தை சொல்லியிருக்க வேண்டும். இங்கு நடத்த திட்டமிட்ட நிலையில் தலைமை செயலர், உள்துறை செயலர் அல்லது போலீஸ் கமிஷனர் அல்லது அரசாங்கத்தில் யாரோ ஒருவரிடம் ரத்து தொடர்பாக சொல்லியிருக்கலாம். என்று கூறியிருந்தார்.

இவ்வாறு முதல்வர் பேசிய நிலையில் கோல்கட்டா வந்து இறங்கிய தென் ஆப்ரிக்க அணி வீரர்களுக்கு, இங்குள்ள சிட்டி சென்டரில் அனுமதி மறுக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டதற்கு இதற்கு, மம்தா-கங்குலி மோதலா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்று தெரியவில்லை. வந்த இறங்கிய வீரர்களை  யாரும் கண்டுகொள்ளாததால், கோல்கத்தா விமான நிலையம் அருகில்  உள்ள ராஜார்ஹட் ஓட்டலில் தென் ஆப்ரிக்க வீரர்கள் தங்கினர்.இந்நிலையில்  ஒருநாள் முன்பாகவே வீரர்கள்  நேற்றே  தங்களது தாயகம் கிளம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

26 minutes ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

1 hour ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

2 hours ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

3 hours ago