எப்போதுமே சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி தான்..! கெவின் பீட்டர்சன் புகழாரம்..!

Published by
செந்தில்குமார்

சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்து, பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தது. அதற்குள் ஃபாஃப் டு பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். விராட் கோலி 54 ரன்கள் எடுத்த அரைசதம் விளாசிய நிலையில் வெங்கடேஷ் ஐயர் அசத்தலான கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இறுதியில் ஆர்சிபி 179/8 ரன் எடுத்து கேகேஆரிடம் தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆர்சிபி அணியின் இந்த ஆட்டத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நீங்கள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க (சேஸ்) வேண்டிய தேவை இருக்கும் போது, ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும். இதனை சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி பலமுறை செய்தும் காட்டியுள்ளார் என்று கூறினார்.

மேலும்,  தோனி இத்தகைய சூழலில் எப்போதுமே ஆட்டத்தை 18வது ஓவர், 19வது ஓவர், 20வது ஓவர் என இறுதிவரை எடுத்து செல்லுமாறு கூறுவார். பெரிய இலக்குகளை சேஸ் செய்யும்பொழுது எம்.எஸ்.தோனியை, மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் பின்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

20 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

45 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago