MIvRCB [file image]
ஐபிஎல் 2024: மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் மும்பை , பெங்களூரூ அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணி 20 முடிவில் 8 விக்கெட் பறிகொடுத்து 196 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டை பறித்தார். பெங்களூரூ அணியில் ரஜத் படிதார் 50 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 197 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்க மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 38 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் அரைசதம் விளாச 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இதுவரை மும்பை அணி 5 போட்டியில் விளையாடிய 2 போட்டி வெற்றியும், 3 முறை தோல்வியையும் தழுவியது. அதே நேரத்தில் பெங்களூரூ அணி 6 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் தழுவியது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…