MIvRCB [file image]
ஐபிஎல் 2024: மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் மும்பை , பெங்களூரூ அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணி 20 முடிவில் 8 விக்கெட் பறிகொடுத்து 196 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டை பறித்தார். பெங்களூரூ அணியில் ரஜத் படிதார் 50 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 197 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்க மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 38 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் அரைசதம் விளாச 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இதுவரை மும்பை அணி 5 போட்டியில் விளையாடிய 2 போட்டி வெற்றியும், 3 முறை தோல்வியையும் தழுவியது. அதே நேரத்தில் பெங்களூரூ அணி 6 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் தழுவியது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…