சூர்யா இப்படி விளையாடினாள் எல்லா போட்டியிலும் வெற்றி தான்! புகழ்ந்த முன்னாள் வீரர்!

Published by
பால முருகன்

டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே சூர்யாகுமார் யாதவ் என்று கூறலாம். ஏனென்றால், கடைசி வரை களத்தில் நின்று 49 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

நிதானமான விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சூர்யாகுமார் யாதவ்  பேட்டிங் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து “ஒரு போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்த அளவுக்கு அருமையாக விளையாடுகிறார் என்றால் நிச்சியமாக அந்த போட்டியில் நீங்கள் போட்டியில் தோற்க முடியாது. அவர் விளையாடும் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுக்கிறார் என்றால், கண்டிப்பாக நான் சொல்வேன் தவறாமல் நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.

நான் எதற்காக இந்த அளவுக்கு உறுதியாக சொல்கிறேன் என்றால் அடிக்கும் வேகத்தால். தான் நான் சொல்கிறேன்.அவர் 20 அல்லது 22 ரன்களில் பேட்டிங் செய்ய வந்த போது 22 லிருந்து 52 ரன்களுக்கு எவ்வளவு விரைவாக சென்றார் என்பதை  பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு சிக்ஸர் ஓவர் கவரில், பின்னர் மற்றொரு சிக்ஸர் மற்றும் அதற்குப் பிறகு ஒரு பவுண்டரி அடித்தார். இப்படியே அவர் விளையாடினாள் இந்திய அணி தோல்விக்கு வாய்ப்பு இருக்காது எல்லா போட்டிகளிலும் வெற்றிபெறும்” என்றும் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

13 minutes ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

1 hour ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

2 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

4 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago