தொடையில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடத்திய உடற்பயிற்சி பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், ரோஹித் குறித்து பி.சி.சி.ஐ மற்றும் தேர்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐபிஎல் 13 வது சீசனில் ரோஹித் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இருப்பினும், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 33 வயதான ரோஹித் விளையாடியது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், பி.சி.சி.ஐ ரோஹித் சர்மாவிற்கு டிசம்பர் 11 உடற்தகுதி பரிசோதனையை நடத்தக்கூடும் என்றும் கூறியது. இப்போது, ரோஹித் உடற்பயிற்சி பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு டிசம்பர் 14 அன்று ரோஹித் சர்மாவை அனுப்பக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகள் இருப்பதால், இந்திய தொடக்க வீரர் ரோஹித் உடனடியாக அணியில் சேர முடியாது, மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாக செல்ல வேண்டியிருக்கும். அப்படி ரோஹித் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு சென்றால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் கலந்துகொள்ள முடியும்.
இதனால், ரோஹித் ஜனவரி 7 -ம் தேதி நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்கும் முதல் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…