WorldCup Cricket 2023 [Image source : ICC]
இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு இருக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் வருகிறது. இந்த தொடருக்கான தங்களது அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, இந்தாண்டு உலக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 .19 கோடி (4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதுபோன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடையும் (இரண்டாவது) அணிக்கு சுமார் ரூ.16.50 கோடி ( 2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படவுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு தலா ரூ.33 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…