IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

Published by
murugan

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்தபோட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டைகளை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 29 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையில் மத்தியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 21 ரன்கள் எடுத்தார். 163 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.

இதில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் நான்காவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிலீ ரோசோவ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓவர் வீசிய சிவம் துபே தனது முதல் ஓவரிலே சிறப்பாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் ஜானி பேர்ஸ்டோவ்  அரைசதம் அடிக்காமல் 46 ரன்கள் எடுத்து  வெளியேறினார். அடுத்து ஷஷாங்க் சிங் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில்  சிறப்பாக விளையாடி வந்த ரிலீ ரோசோவ் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் போல்ட் ஆகி 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் சாம் கரண், ஷஷாங்க் சிங் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். 

இறுதியாக பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கடைசிவரை களத்தில் சாம் கரண் 27* ரன்களுடனும் , ஷஷாங்க் சிங் 25* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

சென்னை இதுவரை பத்து போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டியில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 10 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 minutes ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

1 hour ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

3 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

20 hours ago