உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், இந்திய்ய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிரது. இதில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மூலம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனோஅவுக்கு எதிரான போரில் இந்திய அரசிற்கு உதவுங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக, இந்தைய விளையாட்டு வீரர்கள் கொரோனாவுக்கு எதிராக போரிட
தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் சமுக வளைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை தோற்கடிக்க நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக நான் ரூ.52 லட்சம் வழங்குகிறேன். இதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சமும், உத்திர பிரதேச முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்க உள்ளேன். நீங்களும் தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ரெய்னா தெரிவித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து பாரத பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அற்புதமான ஐம்பது என்று கொரோன தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்த சுரேஷ் ரெய்னாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…