உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், இந்திய்ய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிரது. இதில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மூலம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனோஅவுக்கு எதிரான போரில் இந்திய அரசிற்கு உதவுங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக, இந்தைய விளையாட்டு வீரர்கள் கொரோனாவுக்கு எதிராக போரிட
தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் சமுக வளைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை தோற்கடிக்க நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக நான் ரூ.52 லட்சம் வழங்குகிறேன். இதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சமும், உத்திர பிரதேச முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்க உள்ளேன். நீங்களும் தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ரெய்னா தெரிவித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து பாரத பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அற்புதமான ஐம்பது என்று கொரோன தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்த சுரேஷ் ரெய்னாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…