ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 33 ரன்கள் எடுத்தார்.
189 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் முதலே அதிரடியாக ராஜஸ்தான் விளையாடினர். மனன் வோரா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
மேலும், நிதானமாக விளையாடி வந்த பட்லர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 49 ரன்னில் ஜடேஜா வீசிய சுழல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் எண்ணிக்கை 87 இருக்கும்போது ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ராஜஸ்தான் அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் சிவம் துபே, மில்லர், ரியான் பராக், மோரிஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். சென்னை அணியில் மொயீன் அலி 3, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
மேலும், ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் 4 கேட்சை பிடித்துள்ளார். சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியை தழுவியுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…