பேட்டிங், பந்துவீச்சில் கலக்கும் ரஷீத் கான்… ஐபிஎல் இல் படைத்த சாதனை.!

Published by
Muthu Kumar

குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், ஐபிஎல் தொடரில் நேற்று பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் நேற்று மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரஷீத் கான் இறுதி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு போராடினார்.

அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல்வேறு சாதனைகளை நேற்று முறியடித்துள்ளார். ரஷீத் பந்துவீச்சில் நேற்று 4/30 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் 550 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும் 24 வயதுக்குள் டி-20 போட்டிகளில் 550 விக்கெட்களை வீழ்த்திய இவர், ஒட்டு மொத்தமாக டி-20யில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் பட்டியலில் பிராவோவிற்கு(615) அடுத்தபடியாக உள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில், பேட்டிங்கிலும் பின்வரிசை வீரராக ரஷீத் களமிறங்கி 79*(32) ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் பின்வரிசை வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவரும் ரஷீத் கான் தான், இவர் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் சென்னை அணிக்கு எதிராக 2021இல் 66*(34) எடுத்ததே இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக இருந்தது.

நேற்றைய போட்டியில் ரஷீத் கான் 32 பந்துகளில் 79* ரன்கள்(3 போர்கள், 10 சிக்ஸர்கள்) எடுத்ததன் மூலம் டி-20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆப்கானிஸ்தான் பிரீமியர்லீக் தொடரில் 56*(27) ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

32 minutes ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

2 hours ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

15 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

15 hours ago