#RCBvKKR: மேக்ஸ்வெல்-டி வில்லிர்ஸ் பேயாட்டம்.. கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல்-டி வில்லிர்ஸ்-ன் அதிரடி ஆட்டத்தால் பெண்களின் அணி 204 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – படிக்கல் களமிறங்கினார்கள். இதில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய பட்டிதார் 1 ரன் மட்டுமே எடுக்க, அவரைதொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய படிக்கல் 25 ரன்களில் வெளியேற, டி வில்லிர்ஸ் களமிறங்கினார். அவர் மேக்ஸ்வெலுடன் இணைந்து ஆட, இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் உயரத் தொடங்கியது. 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விரைவில் அரைசதம் எடுத்தோர் பட்டியலில் இணைந்தார், மேக்ஸ்வெல்.

49 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் வெளியேறினார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். அவரைதொடர்ந்து ஜேமிசன் களமிறங்க, டி வில்லிர்ஸ் பேயாட்டம் ஆடத் தொடங்கினார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். டி வில்லிர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா களமிறங்கவுள்ளது.

Published by
Surya

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

5 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

6 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

7 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

8 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

8 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

9 hours ago