முக்கியச் செய்திகள்

டாஸ் வீசுவதில் ரோஹித் முறைகேடு..? வாசிம் அக்ரம் கூறுவதென்ன.?

Published by
murugan

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள  உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செல் அதிரடியாக 134 ரன்களும், கேன் வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியது.  இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி அனைவரும் பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தனது வினோதமான பேச்சால் சர்ச்சையை கிளப்பினார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த்,  இந்திய அணியும், ரோஹித் சர்மாவும் டாஸ் போடுவதில் முறைகேடு செய்வதாக  குற்றம் சாட்டினார். இதுகுறித்து  பேசியபோது, ” ரோஹித் சர்மா  டாஸ் சுண்டி விடும்போது  நாணயத்தை வெகுதூரம் வீசுகிறார். இதனால் அருகில் இருக்கும் மற்ற அணி கேப்டன்கள் அந்த நாணயத்தை சென்று பார்ப்பதே இல்லை. ஐசிசிமற்றும் பிசிசிஐ ஆகியவற்றுடன் இணைந்து ரோஹித் சர்மா டாஸ் போடுவதில் முறைகேடு செய்து தங்கள் பக்கம் போட்டியை சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ” நாணயம் எங்கு விழ வேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்? எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது . எனக்கு அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவே விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…

10 minutes ago

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

52 minutes ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

1 hour ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

2 hours ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

2 hours ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

3 hours ago