முக்கியச் செய்திகள்

டாஸ் வீசுவதில் ரோஹித் முறைகேடு..? வாசிம் அக்ரம் கூறுவதென்ன.?

Published by
murugan

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள  உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செல் அதிரடியாக 134 ரன்களும், கேன் வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியது.  இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி அனைவரும் பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தனது வினோதமான பேச்சால் சர்ச்சையை கிளப்பினார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த்,  இந்திய அணியும், ரோஹித் சர்மாவும் டாஸ் போடுவதில் முறைகேடு செய்வதாக  குற்றம் சாட்டினார். இதுகுறித்து  பேசியபோது, ” ரோஹித் சர்மா  டாஸ் சுண்டி விடும்போது  நாணயத்தை வெகுதூரம் வீசுகிறார். இதனால் அருகில் இருக்கும் மற்ற அணி கேப்டன்கள் அந்த நாணயத்தை சென்று பார்ப்பதே இல்லை. ஐசிசிமற்றும் பிசிசிஐ ஆகியவற்றுடன் இணைந்து ரோஹித் சர்மா டாஸ் போடுவதில் முறைகேடு செய்து தங்கள் பக்கம் போட்டியை சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ” நாணயம் எங்கு விழ வேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்? எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது . எனக்கு அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவே விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

3 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

23 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

42 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago