விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

Published by
பால முருகன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து : பிட்ச் முதல் ஸ்ட்ரீமிங் வரை முழு விவரம் இதோ!

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார்  சேர்க்கப்பட்ட காரணத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இல்லாததை நிரப்ப ஒரு அனுபவமிக்க வீரர் இருந்தால் நன்றாக் இருக்கும். அந்த மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தோம்.

ஆனால் இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டோம்.  எனவே, விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறியுள்ளார்.  மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

26 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

46 minutes ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

1 hour ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago