விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

Published by
பால முருகன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து : பிட்ச் முதல் ஸ்ட்ரீமிங் வரை முழு விவரம் இதோ!

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார்  சேர்க்கப்பட்ட காரணத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இல்லாததை நிரப்ப ஒரு அனுபவமிக்க வீரர் இருந்தால் நன்றாக் இருக்கும். அந்த மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தோம்.

ஆனால் இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டோம்.  எனவே, விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறியுள்ளார்.  மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

8 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

8 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

9 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

11 hours ago