Worldcup 2023 Champions Autralia [Image Source : Reuters]
நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது.
இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர்.
உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! பாட் கம்மின்ஸ்
ஆனால், இறுதியில், இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை கண்டது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 6வது முறையாக உலகக்கோப்பையை தன்வசமாக்கியது. இந்தியாவுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஏற்கனவே அறிவித்து இருந்தபடி, ரூபாய் 33 கோடி ரூபாய் (4 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது. அதே போல, இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 16 கோடி ரூபாய் (2 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது.
அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா 6.50 கோடி வழங்கப்பட்டது. லீக் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிக்கும் 83 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெற்ற புள்ளிகளுக்கு தலா 33 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…