பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் 1999-ம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 20 ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சோயிப் மாலிக் தான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினர்.
மேலும் இனிமேல் அதிக நேரம் எனது குடும்பத்துடன் செலவிட முடிவு செய்துள்ளேன் என கூறினார்.சோயிப் மாலிக் நடப்பு உலக கோப்பையில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார்.ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.இதனால் இவரின் ஆட்டத்திற்கு கடும் விமர்சனம் எழுந்தது.
சோயிப் மாலிக் 285 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்களை குவித்துள்ளார்.மேலும் 158 விக்கெட்டை பறித்து உள்ளார்.சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…