பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் 1999-ம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 20 ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சோயிப் மாலிக் தான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினர்.
மேலும் இனிமேல் அதிக நேரம் எனது குடும்பத்துடன் செலவிட முடிவு செய்துள்ளேன் என கூறினார்.சோயிப் மாலிக் நடப்பு உலக கோப்பையில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார்.ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.இதனால் இவரின் ஆட்டத்திற்கு கடும் விமர்சனம் எழுந்தது.
சோயிப் மாலிக் 285 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்களை குவித்துள்ளார்.மேலும் 158 விக்கெட்டை பறித்து உள்ளார்.சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…