இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அரைசதம் விளாசி 60 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ அவுட்டானார். இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 117 ரன்களுக்கு இழந்தது. பின்னர் களமிறங்கிய புஜாரா வந்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாட 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ரகானே களமிறங்க
இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்து உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட் எடுத்துள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…