ICC Men's T20 2024 World Cup [Image Source: ICC]
2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. விட்டதை பிடிக்க வேண்டும் என்று இந்தியா உட்பட அனைத்து அணிகளும் வரவுள்ள டி20 உலககோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றனர்.
நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரும் நாட்களில், 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான மார்க்யூ போட்டியின் அட்டவணையை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஜனவரி 8ம் தேதி வெளியிட உள்ளனர். இதில், ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி ஜூன் 30ம் தேதியிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை: வாய்ப்பு மட்டுமே…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…