ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.
இதில் 3 ரன்கள் மட்டுமே அடித்து கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, ராகுல் திரிபாதி களமிறங்கினார். அபிஷேக் ஷர்மாவுடன் கூட்டணி போட்டு இருவரும் சிறப்பாக ஆட, 34 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஏய்டன் மார்க்கம் களமிறங்க, 31 ரன்கள் அடித்து அபிஷேக் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து நிக்கோலஸ் பூரண் களமிறங்க, ஏய்டன் மார்க்கமுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியாக ஹைதராபாத் அணி, 18.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது நான்காம் வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 4-ம் இடத்திற்கு முன்னேறியது.
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…