ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவித்தது இலங்கை! 4 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆசியக் கோப்பை 2023 (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. நாளை முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. நாளை பாகிஸ்தானில் முல்தானில் உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும், இலங்கையும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இந்த தொடரில் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்கு முன்னேறும். இந்த கட்டத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். குழு A-வில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் B-யில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

இதனிடையே, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை தவிர, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நாளை ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்தாலும், முக்கிய பந்துவீச்சாளர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க உட்பட நான்கு முக்கிய இலங்கை வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோரும் காயம் காரணமாக ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ODI அணிக்கு திரும்பிய குசல் பெரேரா, காய்ச்சலில் இருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், அவர் குணமடைந்தவுடன் மற்ற அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, நாளை ஆசியக் கோப்பையில் இலங்கையின் முதல் போட்டி ஆகஸ்ட் 31-ம் தேதி பல்லேகலேயில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிசானக, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரன, கஸ் ஹேம் பத்திரன, , பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

Published by
பாலா கலியமூர்த்தி
Tags: #AsiaCup2023

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago