வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை பொது வெளியில் தெரிவித்த பிறகே எங்களுக்கு தகவலை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 74 வது சுதந்திர தினத்தில் சர்வேதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தோனி ஓய்வு அறிவித்த அடுத்த நிமிடங்களில் தானும் ஓய்வு பெறுவதாக 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் அறிவித்தார். சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளில் சதம் அடித்த வீரர் ஆவர்.
ரெயினாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுருக்கிறது. அதில், வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த பிறகே பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். மேலும், குறுகிய ஓவர் போட்டிகளில் ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியவர் என்று பாராட்டுகள் தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…