நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா.!

Published by
Muthu Kumar

முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் இந்திய உணவகத்தை திறந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர் நீண்டகாலம் விளையாடியிருந்தார். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டில் தோனியின் ஓய்வு முடிவை அறிவித்த நாளில் அவரும் ஓய்வை அறிவித்தார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா, தற்போது நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமில் இந்திய ரெஸ்டாரண்ட்டை திறந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரெய்னா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ரெய்னா தனது ட்விட்டரில், நெதர்லாந்தில் இந்த ரெய்னா இந்திய உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன், எனக்கு உணவின் மீதுள்ள அன்பு மற்றும் அதீத விருப்பம் காரணமாக இந்த உணவகத்தை திறந்துள்ளேன். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளின் சிறந்த உணவுகளை ஐரோப்பிய மக்களின் மனதில் சேர்க்கும் இந்த பயணத்தை இப்போது தொடங்கியுள்ளேன் என ரெய்னா பதிவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

8 minutes ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

10 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

11 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

12 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

12 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

13 hours ago