இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.
இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி நேற்றைய முன்தினம் தொடங்கி 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்த நிலையில் நேற்று 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் அடித்தபோது டிக்ளேர் செய்தது.
இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்திய அணி 407 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் , சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி வந்தனர். நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 31 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் ரோஹித் அரைசதம் விளாசி 52 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக நேற்றைய 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளனர். இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் 309 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கடைசிநாள் ஆட்டத்தை தொடங்கியது. இன்றைய ஆட்டம் தொங்கிய சில நிமிடங்களில் கேப்டன் ரஹானே 4 ரன்களுடன் வெளியேறினார்.
பின்னர், புஜாரா மற்றும் ரிஷாப் பந்த் இருவரும் இந்திய அணி சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷாப் பந்த் 118 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாப் பந்த் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார், அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். புஜாரா 205 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து 148 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், இறங்கிய ஹனுமா விஹாரி 23*, ரவிச்சந்திரன் அஸ்வின் 39* ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக இந்திய அணி 131 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் எதிரணி இலக்காக நிர்ணயிக்கும் ரன்களை அடிக்காமல் கடைசி நாள் வரை பேட்டிங் செய்யும் அணி விக்கெட்டை இழக்காமல் விளையாடி வந்தால் அந்த போட்டி டிராவில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…