கொஞ்சம் டைம் எடுத்துட்டு ஆடுங்க! விராட் கோலிக்கு முன்னாள் வீரர் கொடுத்த அட்வைஸ்!

Published by
பால முருகன்

விராட் கோலி :  டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சரியாக விளையாடாத காரணத்தால் அவருடைய பார்ம் சற்று விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே, அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் முன்னாள் வீரர்கள் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் என கூறி வருகிறார்கள். இந்நிலையில், சிறிது நேரம் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடினாள் பழைய பார்முக்கு வரலாம் என விராட் கோலிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா ” ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி மீண்டும் பழைய படி, ஃபார்முக்கு திரும்புவார் என நான் நம்புகிறேன்.

virat [File Image]
இந்த உலகக் கோப்பையில் அவர் இதுவரை பெரிய அளவில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே, இதனை எல்லாம் கருத்தில் கொண்டு அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடைசி போட்டியில், முதல் பந்திலேயே சிக்ஸருக்கு முயற்சித்து அவுட் ஆனார். எனக்கு இன்னும் நினைவுக்கு இருக்கிறது.

எனவே, இந்த முறை அந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து விளையாடாமல் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையாக விளையாடினாள் நன்றாக இருக்கும். ஃபசல்ஹக் ஃபாரூக்கி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அவர்களுடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். எனவே அவசர படாமல் கடந்த 3 போட்டிகளில் விளையாடியது போல் இல்லாமல் நிதானமாக விராட் கோலி விளையாடவேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

56 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago