#BREAKING: சற்று நேரத்தில் டெஸ்ட் போட்டி; ஓய்வை அறிவித்த கிறிஸ் மோரிஸ் ..!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவின் வலுவான ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்தார். 

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்தார். கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்காவுக்காக அனைத்து வடிவ  போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதனுடன், ஐபிஎல் தொடரின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார். 34 வயதான மோரிஸ் தனதுஓய்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோரிஸ் தனது கடைசி சர்வதேச போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஜூலை 2019 இல் விளையாடினார். 2012-ல் சர்வதேச போட்டியில் அறிமுகமான மோரிஸ், தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட்டில் 12, ஒருநாள் போட்டியில் 48 மற்றும் சர்வதேச டி20 போட்டியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், மோரிஸ் மூன்று வடிவ போட்டிகளிலும் மொத்தம் 773 ரன்கள் எடுத்துள்ளார்.  ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கிய வீரர் என்றால் அது மோரிஸ் தான், ஐபிஎல் 2021 ஏலத்தில் 16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இருப்பினும், ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை.

ராஜஸ்தானைத் தவிர, மோரிஸ் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். 81 ஐபிஎல் போட்டிகளில் 618 ரன்கள் குவித்ததோடு, 95 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார்.

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கடைசி டெஸ்ட் போட்டியில் சற்று நேரத்தில்  மோதவுள்ள நிலையில் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

15 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

17 hours ago