AUSvENG , T20 Worldcup Big Match [file image]
டி20I: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இரவு 10.30 மணிக்கு B-பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்த போட்டியானது இருந்து வருகிறது.
இந்த 2 அணிகளும் எப்போது மோதினாலும் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பென்பது உச்சத்தில் இருக்கும். மேலும், இரு அணிகளும் தொடர் போட்டிகளை தாண்டி ஒரு ஐசிசியின் சர்வேதச போட்டியில் விளையாடினாள் அந்த போட்டி விறுவிறுப்பு குறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது வரை இந்த 2 அணிகளும் டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் 2 முறை இங்கிலாந்து அணியும் ஒரு முறை ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியானது மழை காரணமாக நடைபெறாமல் போனது.
அதன் பிறகு ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் விளையாட இருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா அணி ஓமான் அணியை வீழ்த்தி ஒரு வெற்றிக்கு பிறகு இந்த போட்டிக்கு வருகின்றனர். இரு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவான வீரர்கள் உள்ளனர். அதன் படி விளையாட போகும் 11 வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…