அவர் கேட்ட முதல் கேள்வி …! நரைன் பற்றி மனம் திறந்த கவுதம் கம்பீர்!!

Published by
அகில் R

கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட  கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது  பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேச்சுகள் நிலவுகிறது.

இந்நிலையில், இவர் ஸ்போர்ட்ஸ்கீடா பத்திரிக்கைக்கு அளித்த ஒரு  பேட்டியில் சுனில் நரைனை குறித்தும், அவருடன் ஏற்பட்ட தருணங்களை குறித்தும் அதில் பகிர்ந்திருந்தார். அவர் பேசிய போது, “நானும் நரைனும் ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள் தான். 

எங்களுடைய உணர்ச்சிகளும் அப்படித்தான் இருக்கும். 2012-ல் சுனில் நரேன் முதன் முதலில் ஐபிஎல் தொடருக்காக ஜெய்ப்பூரில் கேகேஆர் அணிக்காக இணைந்தார். அந்த தருணம் எனக்கு இப்பொழுதும்  நினைவிருக்கிறது.

 நாங்கள் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். நான் அவரை மதிய உணவிற்கு வரச் சொன்னேன். அவர் மிகவும் வெட்கப்பட்டார், மதிய உணவின் போது அவர் ஒரு வார்த்தை கூட எண்ணிடமோ அல்லது வேறு யாருடனும்  பேசவில்லை.

 இறுதியில், அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதுதான் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அது என்னவென்றால், ‘நான் என் காதலியை ஐபிஎல்-க்கு அழைத்து வரலாமா?,” என்று கேட்டார். அதை நான் இன்னும் மறக்கவில்லை. மேலும், அன்றைய நாட்களில் அவர் என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார்.

ஆனால் இப்போது நாங்கள் எதை பற்றினாலும் பேசுகிறோம். அவரை நான் ஒரு நண்பரகவோ, அணியில் விளையாடும் ஒரு வீரராகவோ நினைக்கவில்லை. அவர் எனக்கு உடன் பிறந்த தம்பியை போன்றவர்“ ,என்று கம்பீர் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

4 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

4 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

7 hours ago