வெற்றியை தொடரும் இந்திய அணி ..! சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபாரம் ..!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

நடப்பாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 43-வது போட்டியில், சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று பார்படாஸ்ஸில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கி விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதன்பின் ரிஷப் பண்ட்டும் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார், அவருக்கு பின் களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவரது அதிரடியால் தான் இந்திய அணியின் எகிற தொடங்கியது. சிவம் துபே 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்து விளையாடினார்.

இருவரின் அதிரடி கூட்டணியால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 28 பந்துக்கு 53 ரன்கள் எடுத்தார். அதே போல ஆப்கானிஸ்தான் அணியில் ஃபருக்கி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

அதன்பின் 182 என்ற இமாலய இலக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. எதிர்பார்த்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் அமையாததால் தடுமாறிய ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததன் காரணமாக விக்கெட்டுகளும் சரிந்து கொண்டே இருந்தது.

மேலும், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களின் மிடில் ஓவர் பந்து வீச்சானது ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது. மேலும், பும்ராவின் அட்டகாசமான 3 விக்கெட்டால் ஆப்கானிஸ்தான் அணி முற்றிலும் பொட்டலம் ஆனது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
அகில் R

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

4 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

16 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago