வெற்றியை தொடரும் இந்திய அணி ..! சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபாரம் ..!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

நடப்பாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 43-வது போட்டியில், சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று பார்படாஸ்ஸில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கி விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதன்பின் ரிஷப் பண்ட்டும் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார், அவருக்கு பின் களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவரது அதிரடியால் தான் இந்திய அணியின் எகிற தொடங்கியது. சிவம் துபே 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்து விளையாடினார்.

இருவரின் அதிரடி கூட்டணியால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 28 பந்துக்கு 53 ரன்கள் எடுத்தார். அதே போல ஆப்கானிஸ்தான் அணியில் ஃபருக்கி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

அதன்பின் 182 என்ற இமாலய இலக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. எதிர்பார்த்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் அமையாததால் தடுமாறிய ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததன் காரணமாக விக்கெட்டுகளும் சரிந்து கொண்டே இருந்தது.

மேலும், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களின் மிடில் ஓவர் பந்து வீச்சானது ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது. மேலும், பும்ராவின் அட்டகாசமான 3 விக்கெட்டால் ஆப்கானிஸ்தான் அணி முற்றிலும் பொட்டலம் ஆனது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
அகில் R

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

41 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

1 hour ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

2 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

2 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago