கோப்பை கேகேஆருக்கு தான் ..! அடித்து கூறும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Published by
அகில் R

மாத்தியூ ஹெய்டன் : நாளை நடக்கப்போகும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை வைத்து மாத்தியூ ஹெய்டன் கூறி இருக்கிறார்.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் லீக்கில் ஒரு போட்டி, குவாலிபயர்-1 என 2 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த 2 முறையும் கொல்கத்தா அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது நமக்கு தெரியும். மேலும், கொல்கத்தா அணியின் பந்து வீச்சும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் பலரும் இறுதி போட்டியில் வெற்றி பெற போகும் அணி கேகேஆர் தான் என கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மாத்தியூ ஹெய்டனும் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து மாத்தியூ ஹெய்டன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய போது, “கொல்கத்தா அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். குவாலிபயர் முதல் போட்டிக்கு பின் கொல்கத்தா அணி வீரர்களுக்கு சிறந்த ஓய்வும் கிடைத்துள்ளது. அதே போல் ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியையும் நான் பார்த்தேன். இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றையும் அறிய இந்த போட்டி உதவியாக அமைந்தது.

மேலும், ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி தோற்கடித்திருப்பதால் கொல்கத்தா அணி வீரர்கள் மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதே போல் சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள பிட்ச்சானது சிவப்பு மண்ணை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கொல்கத்தா அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரின் பந்து வீச்சு வித்தியாசமாக அமையும் இதனால் வெற்றி வாய்ப்பு கொல்கத்தா அணிக்கு அதிகம்”, என்று அவர் பேசிய போது கூறி இருந்தார். இவர் கூறுவது ஒரு வகையில் சரிதான் ஏனென்றால் கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களான வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்களும், சுனில் நரேன் 16 விக்கெட்டுகளும் எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago