இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது.   பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், ” ஷஷாங்க் சிங்கும், அசுதோஷும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ஒரு கேப்டனாக நான் உணர்கிறேன். மேலும், நாங்கள் பந்து வீசும் போது அவர்களை முடிந்த அளவிற்கு நன்றாக கட்டு படுத்தினோம். ஆனால், எங்கள் பேட்டிங்க் பவர்பிளேவில் எங்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. பேட்டிங் பவர்பிளேவில் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தோம்.

அங்குதான் நாங்கள் தோல்வியடைந்தோம், போட்டியின் முடிவில் தான் பவர்பிளேவில் ரன்ஸ் எடுக்காததன் முக்கிய துவம் தெரிந்தது. நாங்கள் ஒவ்வொரும் இந்த தவறை திருத்தி கொள்வோம் மேலும் அடுத்த போட்டியில் எங்களது அணுகுமுறையை மாற்றி அமைப்போம். எங்கள் பந்து வீச்சில் கடைசி பந்தில் நாங்கள் ஒரு கேட்சை கைவிட்டோம். அந்த ஓவரில் நாங்கள் அவர்களை 10-15 ரன்களில் வைத்திருக்க முடியும் ஆனால் தவற விட்டுவிட்டோம்.

எங்களது பேட்டிங் தான் இந்த போட்டியில் எங்களை வீழ்த்தியது. எங்கள் அணியில் இளைஞர்கள் இத்தகைய நிலைத்தன்மையுடன் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்று போட்டி முடிந்த பிறகு ஷிகர் தவான் தோல்வியின் காரணத்தை விளக்கி கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

14 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago