வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்கா ..!

Published by
அகில் R

சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி.

வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்கத்தை சிறப்பாக அமைத்து விளையாடியது. தொடக்க வீரர்கள் அமைத்த ஒரு அருமையான கூட்டணியில் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி அமெரிக்கா அணி நகர்ந்தது. இவர்களை தொடர்ந்து ஆரோன் ஜோன்ஸ் நிலைத்து பொறுமையாக விளையாட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது.

அமெரிக்கா அணியில் மோனான்க் பட்டேல் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல வங்கதேச அணியில் ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்திபிஸுர் ரஹ்மான், ரிஷாட் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதனை தொடர்ந்து எளிய இலக்கான 145 ரன்களை எடுக்க வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ரன்களை எடுக்க தவறி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மேலும், எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை இழந்து வெளியேறி கொண்டிருந்தனர். இதனால் இறுதியில் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அமெரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

அதே போல அமெரிக்கா அணியில் அலி கான் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

59 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago