2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி! ஐசிசி அறிவிப்பு

Published by
Ramesh

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்தது. இந்த நான்கு வீரர்களில் விராட் கோலி, முகமது ஷமி, சுப்மன் கில் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செலும் இடம்பெற்றனர்.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வென்றுள்ளார். இந்த தகவலை ஐசிசி தனது அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் அறிவித்துள்ளது. விராட் கோலி இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

மேலும் கடந்தாண்டு 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 8 அரை சதங்களும் அடங்கும். ஐசிசி விருது வென்ற கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published by
Ramesh

Recent Posts

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

28 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

1 hour ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

2 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

5 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

6 hours ago