கொரோனா பரவலுக்கும் மத்தியில் நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள், தீவிரமாக விளையாடியது. இதில் முதலில் நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வானது. அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தேர்வானது.
நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த இறுதிப்போட்டி, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடனும், வெற்றிகரமாகவும் நடத்துவது என்பதை இங்கிலாந்து, இந்தியா உட்பட சில கிரிக்கெட் வாரியம் செய்து காட்டியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்றும், இதுக்குறித்து இங்கிலாந்து அரசிடம் ஆலோசித்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…