இதுதான் கடைசி சீசனா? – வர்ணனையாளர் கேள்விக்கு தோனி பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

இது எனது கடைசி சீசன் என்று நான் சொல்லவில்லை என்பது போல் சென்னை கேப்டன் தோனி பதில்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 45-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனிக்கு ஸ்டேடியம் முழுவதும் மஞ்சள் நிறம் பெரும் வரவேற்பை அளித்ததுடன், ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

இதன்பின், மைதானத்தில் ரசிகர்களின் சத்தத்தின் மத்தியில் வர்ணனையாளர் டேனி மாரிசன், உங்கள் கடைசி ஐபிஎல் சீசனை அனுபவித்து விளையாடி வருகிறீர்களா? என தோனியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, இது எனது கடைசி சீசன் என நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் கிடையாது என சிரித்துக் கொண்டே கூறினார். தோனியின் பதில் மூலம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago