கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும் ! ஆர்சிபியை விமர்சித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த்!!

Published by
அகில் R

க்ரிஷ் ஸ்ரீகாந்த் : ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 19-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்த போது பெங்களூரு அணி, சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வீழ்த்தியிருந்தார்கள். அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி பெற்று பிளே-ஆஃப் சுற்றிலிருந்தும் வெளியேறினார்கள்.

சென்னை அணியை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை பெங்களூரு அணியும், பெங்களூரு அணியின் ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடினார்கள். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் ஒரு சிலர் அதை விமர்சித்து பேசி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரது யூடியூப் சேனலில் அவரது மகனான அனிருதா ஸ்ரீகாந்துடன் கிரிக்கெட் பற்றி விவாதித்த வீடியோவில் பெங்களூரு அணியை விமர்சித்து சில விஷயங்களை கூறி இருந்தார்.

அவர் கூறுகையில், “வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்கும் போது உங்கள் வாயை மூடிக்கொண்டு வெற்றியை தொடருங்கள், நீங்கள் செய்யும் ஒரு செயலில் இருந்து சத்தம் எழுப்பினால் உங்களால் அந்த வேலையை செய்து முடிக்க முடியாது. அதனால் கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு தான் விளையாட வேண்டும்.

நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால் வாழ்த்துக்கள், அதே நேரத்தில் நீங்கள் மோசமாக விளையாடியிருந்தால் அந்த விமர்சனத்தையும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் ஒருபோதும் வாயைத் திறந்து ஆக்ரோஷத்தைக் காட்டக்கூடாது. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது போல கருதினார்கள் ஆனால் தகுதி பெற்றவுடன் நாக் அவுட் ஆனார்கள்”, என்று அவர் கூறியிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

6 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

35 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago