யுவராஜ் சிங், கோலி சாதனை பட்டியலில் இடம்பிடித்த சிவம் துபே..!

Published by
murugan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார்.

முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட நாயகன் ஆனார். மேலும், துபே இந்த போட்டியில்  2 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்நிலையில், ஒரே சர்வதேச டி20 போட்டியில் சிவம் துபே ஒரு அரை சதம் மற்றும் 1 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனை பட்டியலில்  இணைந்துள்ளார்.

நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு! டி20-யில் களமிறங்கும் கிங் கோலி!

கோலி, யுவராஜ் சிங் , ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா , அக்சர் படேல் மற்றும்  வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குப் பிறகு ஒரே போட்டியில் அரைசதம் அடித்து விக்கெட்டை வீழ்த்திய 7-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சிவம் துபே பெற்றார். இந்த பட்டியலில் யுவராஜ்  3 முறையும், விராட் கோலி 2 முறையும் மற்ற வீரர்கள் தலா ஒரு முறை இந்த சாதனையை படைத்துள்ளனர்.

டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற்றவுள்ளது.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

10 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

10 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago