புஜாராவை விட சிறந்த வீரர் இருக்காங்களா? கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

Published by
பால முருகன்

செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார்.

அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்திய முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது சற்று வேதனையாக இருக்கிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் அஜிங்க்யா ரஹானேவை தேர்வு செய்யவில்லை, சேதேஷ்வர் புஜாராவை எந்த காரணமும் சொல்லாமலே வெளியேற்றியுள்ளீர்கள்.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் புஜாரா சாதனையைப் பார்த்தால் விராட் கோலிக்கு இருந்த அதே பங்களிப்பை புஜாராவுக்கு உண்டு. புஜாரா ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது எனக்கு இன்னும் வரை புரியவில்லை.டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் எங்களிடம் இல்லை. டெஸ்ட் போட்டிகள் என்றாலே நிதானமாக விளையாட கூடிய நல்ல வீரர் அவர்.

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

பல போட்டிகளில் இந்திய அணியை தடுமாற விடாமல் நிதானமாக விளையாடி இருக்கிறார். அவரால் தான் இந்தியா அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது. அந்த மாதிரி ஒரு வீரர் இந்த முறை அணியில் இல்லாதது வேதனை அளிக்கிறது” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், புஜாரா தென்னாப்பிரிக்காவில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 28.15 சராசரியில் 535 ரன்கள் எடுத்துள்ளார். அதைப்போல, மறுபுறம், ரஹானே 6 டெஸ்டில் 36.54 சராசரியுடன் 402 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

22 minutes ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

58 minutes ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

1 hour ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

2 hours ago

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

9 hours ago

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

9 hours ago