நான் ஓய்வை அறிவிக்கவில்லை…மேரி கோம் விளக்கம்..!

Published by
murugan

ஆறு முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவித்ததாக சில ஊடகங்கள் தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் கூறுகையில், “நான் இன்னும் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. எனது கருத்து தவறான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை அறிவிக்க வேண்டிய போது நானே ஊடகங்கள் முன் வருவேன். நான் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தேன், அது உண்மையல்ல.

IndvsEng : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு பள்ளி நிகழ்வில் நான் கலந்து கொண்டேன், அதில் நான் குழந்தைகளை ஊக்கப்படுத்தினேன், எனக்கு இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற பசி உள்ளது, ஆனால் ஒலிம்பிக்கில் வயது வரம்பு என்னை பங்கேற்க அனுமதிக்கவில்லை. தனது உடற்தகுதியில் தான் இன்னும் கவனம் செலுத்தி வருவதாகவும், எப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அனைவருக்கும் அறிவிப்பேன்” என்றும் கூறினார்.

40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

1 hour ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

2 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

4 hours ago