கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் கங்குலி இது குறித்து கூறுகையில் ,ஒரு பிரபலத்தின் மகன் அல்லது மகளாகவோ இருந்தால் எதிலும் ஈடுபடக் கூடாது என சிலர் எண்ணுகின்றனர். முன்னாள் வீரர் சச்சின் மகன் அர்ஜுன் இனி விளையாட தடை விதிக்கலாமா?சச்சின் மகன் என்று பார்க்கக்கூடாது அவரின் திறமையை மட்டுமே எடை போடவேண்டும்.
ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ஆகிய இரு சகோதரர்களும் பல போட்டிகளில் விளையாடினர்.நல்லவேளையாக எனக்கு மகன் இல்லை. ராகுல் டிராவிடின் மகன்கள் கர்நாடக கிரிக்கெட் லீக்குகளில் சதங்கள் அடித்தனர்.திறமை இருந்தால் அவர்கள் இந்தியா அணியில் இடம் பிடிப்பார்கள்.
இதே தான் ஜெய் ஷா . கடந்த 6-7 வருடங்களாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகங்களில் ஒருவராக இருந்து உள்ளார். அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன.? அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல.ஜெய் ஷாவைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட வேண்டும் என கங்குலி கூறினார்.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…