மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கி இந்திய அணி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 11 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களில் வெளியேறி, இந்திய அணி 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. தற்போது களத்தில் தீப்தி சர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் உள்ளனர்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…