காட்டடி அடித்த ஹிட்மேன் மற்றும் கிங் கோலி..!ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்த இந்திய அணி.!

Published by
murugan
  • இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இன்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் சரியான தொடக்கத்தை அமைக்காமல் வார்னர் 3 ,பின்ச் 19 ரன்களிலும் வெளியேறினார்கள்.இதன் பின்பு வந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 4,ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்.

ஆட்டம் தொடக்கத்திலேயே கே.எல் ராகுல் 19 ரன்களுடன் வெளியேற பின்னர் இந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர்.

இவர்களின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது .அதிரடியாக விளையாடிய விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 140  ரன்கள் மேல் அடித்தனர். பின்னர் ரோகித் சர்மா 119 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்து 89 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இறுதியாக இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Published by
murugan
Tags: INDvsAUS

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago