Indian Womens Archery Team [file image]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது.
உலகநாடுகள் பங்கேற்று நாளை தொடங்கவிருக்கும் மாபெரும் விளையாட்டு தொடரில் நடைபெறும் வில்வித்தை போட்டி தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட பஜன் கவுர் 11 இடமும், அங்கிதா பகத் 22 இடமும் மற்றும் தீபிகா குமாரி 23வது இடமும் பிடித்துள்ளனர்.
இதனால், புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி 4-ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. நடைபெற்ற இந்த வில்வித்தை போட்டியில், மொத்தம் 2 பாதிகளாக தனிநபர் ரேங்கிங் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் சுமார் 72 முறை அம்புகளை எய்தனர். இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்பட்டது.
அதன்படி மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளில் 11-ம் இடம் பிடித்தார், அவரை தொடர்ந்து பஜன் கவுர் 659 ஸ்கோருடன் 22-ம் இடம் பிடித்தார், தீபிகா குமாரி 658 ஸ்கோருடன் 23-ம் இடம் பிடித்தார். இதனால் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி ஒட்டு மொத்தமாக பெற்ற 1983 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் காரணமாக மொத்தமாக புள்ளிப்பட்டியல் ரேகிங் அடிப்படையில் 4-ஆம் இடம் பிடித்து அசத்தியது, இதனால் நேரடியாக காலிறுதிக்கு சுற்றுக்கும் தகுதி அடைந்துள்ளது. மேலும், கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை மகளிர் பிரிவில் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தையில் தனி நபருக்கான ரவுண்ட் ஆஃப் சுற்று வரும் ஜூலை 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதே நேரம் மகளிர் அணிக்கான நாக்-அவுட் போட்டி 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த இரண்டிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் அதிலும் 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-ல் சுற்றில் விளையாடி தகுதி பெறுவார்கள்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…