‘தங்கத்துக்கு போராடிய தங்கமகன்’..! இறுதியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் ‘நீரஜ் சோப்ரா’..!

Published by
அகில் R

பாரிஸ் : இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்ப்பார்த்த ஒரு போட்டி தான் எட்டி எறிதல், அதற்கு மிக முக்கிய காரணம் நீரஜ் சோப்ரா ஏனென்றால் கடந்த 2020ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்திய சார்பாக விளையாடிய இவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதனால் அவர் தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஒட்டுமொத்த இந்தியர்களாலும் ‘தங்கமகன்’ என்று அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.

அதில் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.  அதனை தொடர்ந்து இன்று ஈட்டி எறிதலில் இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் ஒரு வீரருக்கு 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

அதன்படி நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் கோட்டை தாண்டியதால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது த்ரோவில் 89.45 மீட்டர் எறிந்து 2-ஆம் இடம் பிடித்தார். இவருக்கு முன் பாகிஸ்தான் வீரரான ஹர்சத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து ஒலிம்பிக் தொடரின் வரலாற்று த்ரோவை பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக அவர் தொடர்ந்து எறிந்த 3 த்ரோவிலும் கோட்டை தாண்டினார். மேலும், கடைசியாக அவர் எறிந்த த்ரோவிலும் அவர் சரியாக எறியவில்லை. இதன் காரணமாக அவர் 2-ஆம் இடத்தில் நீடித்தார்.

இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற முதல் வெள்ளிப் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுஷீல் குமார், பிவி சிந்துவுக்கு பிறகு தனி நபர் பிரிவில் 3-வது தடகள வீரராக தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. பல காயங்கள் கடந்த வருடம் இவர் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும், தங்கம் கிடைக்கும் என இந்தியா மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கம் கிடைத்தால் சற்று வருத்தத்தில் இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதன் காரணமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

7 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

7 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

9 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

9 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

10 hours ago