இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சமீபத்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் தொடரை கைப்பற்றியது.
இதைதொடர்ந்து இந்த இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றார்.இன்று முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடிய இருவரும் பிருத்வி ஷா (20), மாயங்க் அகர்வால் (32) ரன்களில் வெளியேற பின்னர் இறங்கிய கேப்டன் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிய கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் வெளியேறினார். இதையெடுத்து இறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி காட்டினர்.சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். பின்னர் கடைசிவரை அதிரடியாக விளையாடிய கே.எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள்குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 2 விக்கெட்டை பறித்தார்.348 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…