காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹார்த்திக்கை வரும் 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டாராம்.

டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்..!

இந்த ஆண்டு (2023) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் முழுவதுமாக விளையாடமுடியாமல் போனது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார்.

எனவே, அந்த காயம் இன்னும் ஹர்திக் பாண்டியாவுக்கு சரியாகவில்லை என்ற காரணத்தால் அடுத்ததாக இந்தியா விளையாடிய ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தான் விளையாடினார். இந்த டி20 தொடர்களை தொடர்ந்து ஹர்திக் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது.

இந்த தகவல் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர் அடுத்த ஆண்டு ( 2024) ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

6 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago