7-வது முறை கோப்பையை வென்ற நோவக் ஜோகோவிச்.!

Published by
செந்தில்குமார்

உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கான 2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியானது, இத்தாலியில் உள்ள டுரினில் நடைபெற்றது. நவம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 5 மற்றும் 4 பேர் கொண்ட 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இவருக்கு எதிராக இத்தாலிய வீரர் ஜன்னிக் சின்னர் விளையாடினார்.

இரண்டு செட்களாக நடந்த இந்த இறுதிப்போட்டியில், இரண்டு செட்டிலும் நோவக் ஜோகோவிச் முன்னிலைப் பெற்றார். அதன்படி, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜன்னிக் சின்னரைத் தோற்கடித்து, ஏழாவது முறையாக நிட்டோ ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

நோவக் ஜோகோவிச் இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம், 7 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் மற்றும் 40 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏடிபி பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்,டேனியல் மெட்வெடேவ், ஜன்னிக் பாவி, ஆண்ட்ரி ரூப்லெவ், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஹோல்கர் ரூன் இந்த ஆண்டின் ஏடிபி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த டென்னிஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

13 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

15 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

16 hours ago