பாரிஸ் ஒலிம்பிக் : ஹாக்கியில் அசத்தல் ..! இந்தியாவுக்கு 4-வது வெண்கல பதக்கம்!

Published by
அகில் R

பாரிஸ் : 33-வது ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி விளையாடியது. இந்திய அணி இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் வென்ற நிலையில், நேற்று மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சற்று இந்தியர்களின் இதயத்தை நொறுக்கியது.

இந்நிலையில், இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியை ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி இருந்தது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று விளையாடிய ஹாக்கி போட்டியில் ஸ்பெய்ன் அணியை 2-1 என த்ரில்லாக வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கின்றனர்.

மேலும் இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் கடைசி போட்டி இது என்பதனால், இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் முதல் குவார்ட்டரில் ஸ்பெய்ன் அணி வீரர்கள் தீவிரமான அட்டாக்கிங் விளையாட்டை மேற்கொண்டனர். ஆனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

அதன் பின் தொடங்கிய 2-வது குவார்ட்டரில் தொடக்கத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்கள். இதனால், 1-0 என ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. பின் அந்த 2-வது குவார்ட்டர் முடிவில் இந்திய அணிக்கு கிடைத்த பெனல்ட்டி கார்னரை இந்திய அணியின் கேப்டனான ஹர்மான்ப்ரீத் கோல் அடித்து அசத்தினார்.

இதனால், 1-1 என போட்டி சமநிலை ஆனது, அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 3-வது குவார்ட்டரின் முதல் சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை மீண்டும் ஹர்மான்ப்ரீத் கோல் அடித்து மிரட்டினார். இதன் மூலம் 2-1 என இந்திய அணி போட்டியில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு ஸ்பெயின் அணி கடுமையாக முயற்சித்த போதும் இந்திய அணியின் அற்புதமான டிபேன்ஸ் காரணமாக கோல் அடிக்க முடியாமல் ஸ்பெயின் அணி திணறியது. இதனால், போட்டி நேர முடிவில் இந்திய அணி 2-1 என் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றனர்.

இதன் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே இந்தியா ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago