நாளை நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு நியூசிலாந்து அணியுடன் இந்திய “ஏ” அணி 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்திய “ஏ” அணியில் பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தார்.ஆனால் பிரித்வி ஷா தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியின் பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக போட்டியில் விளையாடுவாரா ..? என்பது பின்னர் முடிவு எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…