மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்த பிஎஸ்ஜி;சவூதி கிளப்புடன் 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ?

Published by
Dinasuvadu Web

உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினாவின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி அவர் விளையாடி வரும் கிளப்பான பிஎஸ்ஜி க்கு  விளையாட இரண்டு வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின்  முன்கள வீரரான லியோனல் மெஸ்ஸி சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாட்கள் அவரது தனிப்பட்ட  பயணத்திற்குப்பிறகு இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று பிரெஞ்சு விளையாட்டு நாளிதழான எல்’ஈக்விப் தெரிவித்துள்ளது.

2021 இல், அவர் பார்சிலோனாவை விட்டு வெளியேறிய பின்னர் பிஎஸ்ஜி க்காக விளையாடி வருகிறார்.இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகிறது,இதனால் அவர் வேறொரு கிளப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி சவூதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராக இருப்பதால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.சவுதி புரோ லீக்கில் விளையாட 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் தொடர்பாக சவுதி அரேபிய அணியான அல்-ஹிலால் உடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் உறுதியானால் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாசருக்கு சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு தொகை அதிகமாக இருக்கும்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago